Published : 25 Dec 2014 09:45 AM
Last Updated : 25 Dec 2014 09:45 AM

குரூப்-2 தேர்வானவர்களுக்கு 29-ல் கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிச.29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஏஒ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் கடந்த 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் டிச.29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.

இதற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ) பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x