Published : 29 Dec 2014 10:12 AM
Last Updated : 29 Dec 2014 10:12 AM
சென்னையில் ஆதார் அட்டைக்கு விவரங்கள் பதிவு செய்து ஓராண்டாகியும் இதுவரை ஆதார் அட்டை கிடைக்கவில்லை என்று வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் வழியாக வாசகர் ஒருவர் தெரிவித்ததாவது:
நான் ஓராண்டுக்கு முன்னர் ஆதார் அட்டை பெறுவதற்காக எனது விவரங்களை எங்கள் பகுதியில் திறக்கப்பட்ட மையத்தில் பதிவு செய்திருந்தேன். இதுவரை ஆதார் அட்டை வரவில்லை. இதுகுறித்து எனக்கு வழங்கப்பட்ட அத்தாட்சி எண்ணை கொண்டு இணையதளத்தில் பார்த்தபோது, ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கிறது. இதுபோல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் தெரிவித்ததாவது:
ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்து அட்டை கிடைக்காதவர்கள், அட்டையின் நிலை குறித்து http://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தொழில்நுட்ப காரணங்களுக்காக சில அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு ரத்து செய்யப்பட்டிருந்தால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றுடன் வந்து, எந்த ஆவணத்தையும் வழங்காமல், மீண்டும் விரல் ரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த சில மாதங்களில் ஆதார் அட்டை கிடைத்துவிடும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT