Published : 04 Nov 2014 08:41 AM
Last Updated : 04 Nov 2014 08:41 AM

சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை- திருநெல்வேலி இடையே நவம்பர் 6-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி- சென்னை சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 6-ம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு சென்னை-எழும்பூரை வந்தடையும். இதற்கான முன்பதிவு நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை- திருநெல்வேலி சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 7-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி- சென்னை சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு சென்னை- எழும்பூரை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை- திருநெல்வேலி பிரீமியம் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 14, 21 ஆகிய நாள்களில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. 14-ம் தேதி புறப்படும் ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 4-ம் தேதியும், 21-ம் தேதி புறப்படும் ரயிலுக்கான முன்பதிவு நவம்பர் 6-ம் தேதியும் தொடங்குகின்றன.

திருநெல்வேலி- சென்னை பிரீமியம் சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 23-ம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.

சென்னை- திருநெல்வேலி சிறப்பு ரயில், எழும்பூரில் இருந்து நவம்பர் 24-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதற்கான முன்பதிவு நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x