Last Updated : 10 Jul, 2019 04:27 PM

 

Published : 10 Jul 2019 04:27 PM
Last Updated : 10 Jul 2019 04:27 PM

மதுரையில் தொடரும் முன்விரோதக் கொலைகள்: 2 நாட்களில் 2 படுகொலை சம்பவங்கள்

மதுரையில் கடந்த 2 நாட்களில் இரண்டு பேர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று நாகமலை புதுக்கோட்டை அருகே தனது அண்ணனை கொலை செய்த நபரை தம்பி பழிக்குப் பழியாக கொலை செய்தார். கொலை செய்துவிட்டு அந்த நபரின் ரத்தத்தை தனது அண்ணன் சமாதியில் தெளித்துவிட்டு அது குறித்து வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்குத் தெரிவித்தார்.

அந்த ஆடியோ வெளியாகி அதிரவைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கொலையும் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கிறது.

சமயநல்லூர் பகுதியில் இன்று அதிகாலையில் வீடு புகுந்து பெயிண்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை  சமயநல்லூர் சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் நிரூன் சக்ரவர்த்தி (29). இவர் பெயிண்ட்  கடை  நடத்திவந்தார். இன்று அதிகாலை இவரது வீட்டுக்குள்  6 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்தது. சக்ரவர்த்தியை சரிமாரியாக வெட்டிக்  கொலை செய்துவிட்டு தப்பியது. இது குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இந்த விசாரணையில்,  அதே பகுதியில் கோயில்  சாமி கும்பிடுவதில்   ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பான முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து சமயநல்லூர் போலீஸார் கொலையாளிகளை தேடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x