Published : 08 Jul 2019 07:43 AM
Last Updated : 08 Jul 2019 07:43 AM
வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தரும் அத்திவரதராஜ பெரு மாளை விடுமுறை நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதர் எழுந் தருளும் விழா கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் விழா என்பதால் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக் காக, அறநிலையத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல் வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து செல்கின் றனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 7.80 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக் கான பக்தர்கள் திரண்டதால், முக் கிய சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் விஐபி வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நகரப் பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசலை, சீரமைக்கும் பணிகளை போலீஸார் மேற்கொண்டனர். வெளி மாநில பதிவெண் கொண்ட கார்கள், நகரப் பகுதிக்குள் வரு வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், மேற்கு ராஜகோபுரம் அருகேயும் நகரப் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக வெளி மாநில கார்கள் சுற்றி வந்தன. இதனால், ரங்கசாமி குளம் அருகே வெளி மாநில கார்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் போலீஸார்
அத்திவரதர் விழாவுக்கான பாது காப்பு பணியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,600 போலீஸார் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸாரின் எண்ணிக்கைகயும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் பற்றாக் குறை காரணமாக பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதிகளில் போலீஸாரை காண முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை உள்ளது.
சுகாதாரமான தண்ணீர்
நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங் காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், குடிநீர் தொட்டியில் வரும் தண்ணீ ரில் அளவுக்கு அதிகமாக பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்படுவதாகவும், அதனால் அந்த குடிநீரை பருக முடியவில்லை எனவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆட்சியர் பொன் னையா கூறும்போது, "விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய நாட் களில், எதிர்பார்த்ததைவிட அதிக மான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து பக்தர்களின் எண் ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், கூட்ட நெரி சலை தவிர்ப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வெயிலில் நிற்பதை தடுக்கும் வகையில், கோயில் உள்ளே வரிசையை எவ்வாறு அமைக்கலாம் என ஆலோ சித்து அத்திட்டத்தை அடுத்து வரும் நாட்களில் செயல்படுத்த உள்ளோம்" என்றார்.
காஞ்சிபுரம் வடக்கு மண்டல டிஐஜி தேன்மொழி கூறும்போது, "பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் களைப்படையாமல் இருப்பதற்காக, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். மேலும், விடுமுறை நாட்களில் கூடு தல் பக்தர்கள் வருவதால், விழுப் புரம், வேலூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 முதல் 1,000 போலீஸாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதியில அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 24 தனிப்படை அமைத்துள்ளோம்.
நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமையில் இருந்து பள்ளி வாகனங்கள் மட்டும், நகரப் பகு திக்கு அனுமதிக்கப்படும். தொழிற் சாலை பேருந்துகளுக்கு அனுமதி யில்லை. நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலை யங்களின் அருகே தொழிற்சாலை பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT