Published : 06 Jul 2019 07:49 AM
Last Updated : 06 Jul 2019 07:49 AM

சமையல் காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?- பொதுமக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு

சமையல் காஸ் சிலிண்டர்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து, காஸ் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறு

வனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களையும், வணிகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர்களையும் விநியோகம் செய்கின்றன.

இந்நிலையில், காஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருப்பதாகவும், சீல் சரியாக இல்லை எனவும் நுகர்வோர்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து, சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் ஏஜென்சி கள் மூலம் சிலிண்டர்கள் குறித்து நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும்போது அதன் எடை, சீல் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை நுகர்வோர்கள் சோதிக்க வேண்டும். மேலும், சிலிண்டரில் உள்ள சீலை அகற்றி பயன்படுத்த ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை ஊழியர்களைக் கொண்டு பரிசோதிக்க செய்ய வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஸ் அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் குழாய் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆஃப் செய்ய வேண்டும், காஸ் லைட், தீக்குச்சிகளைப் பற்ற வைக்கக் கூடாது, மின்விளக்கு சுவிட்சுகளை ஆன் செய்யக் கூடாது, ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து அறைக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மற்றும் 1907 என்ற எண்ணைத் தொடர் கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். காஸ் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x