Published : 08 Jul 2019 08:10 AM
Last Updated : 08 Jul 2019 08:10 AM

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று பாமக இளை ஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் வலியுறுத்தி னார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாமகவின் கொள்கை சமூக நீதி, நீர் மேலாண்மை, தரமான கல்வி, சுகாதாரம், மது விலக்கு, புகையிலை ஒழிப்பு ஆகியவை. தென் மேற்கு பருவ மழை தற்போது பெய்ய தொடங்கியுள்ள நிலையில், மழை நீரை சேமித்து பாதுகாக்க வேண்டும்.

காவிரி நீரைப்பெற தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால், காவிரி மேலாண்மை ஆணையம் 9 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஆனால், கர்நா டகா அரசு தண்ணீர் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண் டும்.

மேகேதாட்டுவில் அணை கட்டினால் கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவு 175 டிஎம்சியாக உயரும். தமிழகத் துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது.

ராசிமணலில் அணை கட்டி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதாவரி-காவிரியை இணைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தகுதியற்ற மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேர்க் கின்றனர். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்.

மாநிலத்தின் உரிமைகள், கலாச்சாரம், பண்பாடு ஆகிய வற்றை மத்திய அரசு மதிக்க வேண்டும். 8 வழிச் சாலை விவகாரம் தொடர்பாக என் பேரில் கேவியட் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என முதல்வரை சந்தித்து முறையிடுவோம்.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றம் தேவையில்லாதது. மத்திய பட் ஜெட்டில் மறைமுகமாக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x