Last Updated : 03 Jul, 2019 04:13 PM

 

Published : 03 Jul 2019 04:13 PM
Last Updated : 03 Jul 2019 04:13 PM

கிரண்பேடிக்கு எதிராக நாளை புதுச்சேரி அதிமுக முற்றுகை போராட்டம்

கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குத் துணைநிலை ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி சென்னை வறட்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், ''மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட காரணமாக உள்ளது'' என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டங்களும் போராட்டங்களும் நடைபெற்ற நிலையில், தற்போது தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு துணைநிலை ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x