Published : 05 Aug 2017 09:24 AM
Last Updated : 05 Aug 2017 09:24 AM
ஜிஎஸ்டி வரிவிகிதத்தை மாற்றா விட்டால் நாடு முழுவதும் கடை யடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்த பின் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா தெரிவித்தார்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரியால் வணிகர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள் பாதிக்கப்படு வதாக சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் 8-ம் தேதி வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு புதிதாக அமல் படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக ஹோட்டல்களுக்கு வரி அதிகம் விதிக்க கூடாது.
சாதாரண கடலை மிட்டாய் களுக்கு 18% வரியை ரத்து செய்ய வேண்டும். இல்லையெ னில் 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும்.பர்னிச்சர் பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து வரியை குறைக்க வேண்டும். வணிகர் நல வாரியம் முடங்கியுள்ளது. அதை சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.
மாவட்டம்தோறும் காவல் துறையினர் இரவு 10 மற்றும் 11 மணியளவில் கடையை அடைக்க வற்புறுத்துகின்றனர். இதை மாற்றி இரவு நேர கடை நடத்த அனுமதிக்க வேண்டும்.
முதல்வர் உடனான சந்திப் பின்போது, நிதியமைச்சர் ஜெயக் குமார் இருந்தார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நாளை (இன்று) நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், கடையடைப்பை கைவிட வேண்டும் என்று வேண்டு கோள் வைத்தனர். நாங்கள் போராட்டத்தை கைவிட முடி யாது, தள்ளி வைக்கிறோம். 8 மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டம் உள்ளது. அனைத்து மாநிலங்களும் இணைந்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். முதல்கட்டமாக 8 மாநிலங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT