Published : 07 Aug 2017 10:02 AM
Last Updated : 07 Aug 2017 10:02 AM

கோவை அரசு கலைக்கல்லூரிமுன்னாள் மாணவர்கள் சார்பில் முப்பெரும் விழா

தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த கோவை அரசு கலைக் கல்லூரியின் 165-ம் ஆண்டு விழா, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 84-ம் ஆண்டு விழா, சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட இருக்கிறது.

செப்டம்பர் மாதம் 10-ம் தேதி காலை 10 முதல் மாலை வரை கல்லூரி வளாகத்தில் இந்த விழா நடைபெற இருப்பதாக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ள இந்த விழாவில், பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கல்லூரியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x