Published : 14 Aug 2017 01:34 PM
Last Updated : 14 Aug 2017 01:34 PM
தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவாக ஆலோசித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பிரதமரை சந்திக்க இன்று (ஆகஸ்ட் 14) காலை 11 மணிக்கு ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயனும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், "தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவாக ஆலோசித்தோம். அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்தோம் என நீங்கள் யூகம் செய்தால் செய்துகொள்ளுங்கள். அதிமுக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கும் விசுவாசிகளின் கைகளில்தான் இருக்கும். எந்த முடிவு எடுத்தாலும் அது தமிழக மக்களின் நன்மை கருதியே எடுக்கப்படும். தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவையே நாங்கள் எடுப்போம்" என்றார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது எம்.பி.., மைத்ரேயனும் இருந்தார். ஆங்கில ஊடகங்களுக்கு பன்னீர்செல்வம் கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அதிமுக அணிகள் இணைப்பு பிரச்சினையில் கவனம் செலுத்திவருகிறார் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT