Published : 22 Aug 2017 08:58 AM
Last Updated : 22 Aug 2017 08:58 AM

எழுத்துப்பூர்வ வாக்குறுதியால் இணைந்த ஓபிஎஸ்

எழுத்துப்பபூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிக்குப் பிறகே அதிமுக அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக அணிகள் நேற்று இணைந்தன. கடந்த 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இணைப்பு கடைசிநேரத்தில் கைகூடவில்லை. நேற்று காலை இணைப்பு பேச்சு மதியம் 2 மணி வரை நீடித்தது. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை எழுத்துப்பூர்வகமாக அளிக்க வேண்டும் என்பதில் ஓபிஎஸ் அணி உறுதியாக இருந்ததால் இந்த தாமதம் எனக் கூறப்படுகிறது.

இறுதியில் பகல் 1.50 மணிக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து எழுத்துப்பூர்வ உறுதியை அளித்ததாகவும், அதன்பிறகே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x