Published : 14 Aug 2017 10:02 AM
Last Updated : 14 Aug 2017 10:02 AM
சென்னை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்களிடமிருந்து குப்பை களை வகை பிரித்துப் பெறுதல், வீடுகளில் தனி கழிவறைகளைக் கட்ட பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், திறந்தவெளி யில் மலம் கழித்தல் இல்லாத மாநகரை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டப் பணிகளை சிறப்பாக செய்வதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திட்ட அமலாக்கப் பிரிவு ஏற் படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 61 வார்டுகள் திறந்தவெளியில் மலம் கழித் தல் இல்லாத பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளன.
மேலும் பல வார்டுகள் விரைவில் அறிவிக்கப் பட உள்ளன. படிப்படியாக அனைத்து வார்டுகளும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக மாற்றப்படும்.
கூடுதல் பொறுப்பு
இத்திட்டங்கள் மற்றும் குப்பைகளை வகை பிரித்துப் பெறுதல் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப் பது, தகவல்களைச் சேகரிப்பது, அவை குறித்து மாநகராட்சி தலைமைக்கும், மத்திய அரசுக் கும் கோப்புகளை அனுப்பி வைப்பது, அத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை, தற்போது மாநகராட்சியின் பல்வேறு துறை அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
அவர்கள் ஏற்கெனவே வேலை பளுவுடன் உள்ள நிலையில், தூய்மை இந்தியா திட்டப் பணிகளையும் கூடுதலாக கவனிப்பது சிரமம். அதனால் தூய்மை இந்தியா திட்ட அமலாக்கப் பிரிவு ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பேரில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT