Published : 25 Aug 2017 08:17 AM
Last Updated : 25 Aug 2017 08:17 AM
வடக்கு ஒடிசா கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவி வந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்துள்ளது.
அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT