Published : 02 Aug 2017 09:35 AM
Last Updated : 02 Aug 2017 09:35 AM

அதிமுகவின் அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை: மைத்ரேயன் திட்டவட்டம்

அதிமுகவின் பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் திட்டவட்ட மாகத் தெரிவித்தார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகி களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், ‘அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றிய நல்ல தகவல் விரைவில் வரும்’ என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சில ஹோட்டல்களில் ‘இன்று ரொக்கம்; நாளை கடன் கிடைக் கும்’ என எழுதியிருப்பார்கள். என்றைக்கு சென்றாலும் அந்த அறிவிப்புப் பலகை அப்படியே தான் இருக்கும். கடன் என்றைக் கும் கிடையாது என்பதைத்தான் அப்படி எழுதியிருப்பார்கள். அதிமுக அணிகள் இணை யும், இணையும் என முதல்வர் பழனிசாமி அணியினர் கூறுவதை யும் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் ஏற்கெனவே தெளிவாகக் கூறியிருக்கிறோம். பிரிந்த அணி கள் இணைய இனி வாய்ப்பில்லை. ஓபிஎஸ் தலை மையை ஏற்றுக் கொள்பவர்கள் எங்கள் அணியில் சேர மட்டுமே வாய்ப்புள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x