Published : 20 Aug 2017 09:47 AM
Last Updated : 20 Aug 2017 09:47 AM
சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.22 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென குறைந்தது. இதேபோல், மத்திய அரசு தங்கம் ஏற்றுமதி கொள்கையில் சில மாற்றங்களை செய்தது. இது உடனடியாக அமலுக்கு வந்ததால், தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.22 ஆயிரத்து 72-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 759-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 795க்கு விற்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘இந்தியாவில் தங்கம் ஏற்றுமதி செய்வதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தங்கம் விலை தற்காலிகமாக குறைந்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT