Published : 05 Aug 2017 08:45 AM
Last Updated : 05 Aug 2017 08:45 AM

மெட்ரோ ரயிலில் மாணவர்கள் உற்சாகம்: 20 நாட்களில் 1,950 பேர் பயணம்

பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கடந்த 20 நாட்களில் 1,950 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் தற்போது சின்னமலை - விமான நிலையம், விமான நிலையம் கோயம்பேடு, சின்னமலை - நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. ஆரம்ப கட்டணம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.60 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் சிறப்பாகவும், வசதியாகயும் உள்ளது. பள்ளி மாணவர்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் குறித்து பள்ளி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மெட்ரோ ரயில் இயக்கம், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். கடந்த மாதம் 13-ம் தேதி முதல் இதுவரையில் 10 மாநகராட்சி அரசுப் பள்ளி மாணவர்கள் 1,950 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, தனியார் பள்ளி மாணவர்களையும் அழைத்து வந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x