Published : 04 Jul 2017 11:27 AM
Last Updated : 04 Jul 2017 11:27 AM

அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தனர். அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓபிஎஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டாலும் அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வருவது வரவேற்கத்தக்கது. இந்நிலையில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கட்சியை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது'' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுகவை வழிநடத்த அமைக்கப்பட உள்ள 7 பேர் கொண்ட குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார். துணைத் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். இக்குழுவில் எடப்பாடி அணியிலிருந்து 3 பேரும், ஓபிஎஸ் அணியிலிருந்து 2பேரும் இடம்பெறுவர் என்றும், ஓபிஎஸ் அணியில் உள்ள இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x