Published : 26 Aug 2017 09:25 AM
Last Updated : 26 Aug 2017 09:25 AM

நகைக் கடையில் நூதன திருட்டு 3 பெண்கள் கைது

நகை வாங்குவதுபோல் நகைக் கடையில் நூதன திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி சிவகங்கையைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் நவரத்னம் சிங் (47). இவர் அதே பகுதியில் ரத்னா ஜீவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். இந்தக் கடைக்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வந்த 3 பெண்கள் நகை வாங்குவதுபோல் பாவனை செய்தனர்.

பின்னர், விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிச் சென்றனர்.

அதன் பிறகே நகை திருட்டு குறித்து விற்பனையாளருக்கு தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து நவரத்னம் சிங் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் விரைந்து சென்று நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் நகை திருடியதாக சிவகங்கை ராமலட்சுமி (60), அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (37), லட்சுமி (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x