Published : 10 Aug 2017 09:33 AM
Last Updated : 10 Aug 2017 09:33 AM

தலைமை ஆசிரியர் பணிக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு: ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக இன்று (வியாழக் கிழமை) நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2017-2018ம் கல்வி ஆண்டுக்கு, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (வியாழக் கிழமை) ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை இக்கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x