Published : 11 Aug 2017 09:36 AM
Last Updated : 11 Aug 2017 09:36 AM

கிணறு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: லெட்சுமிபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

கிணறு எங்களுக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என லெட்சுமிபுரம் கிராமத்தினர் அறிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் மெகா கிணறு வெட்டப்பட்டது. இதனால் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு வற்றியது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே பன்னீர்செல்வம் தனது நண்பர் சுப்புராஜுக்கு நிலத்தை எழுதி வைத்தார். இதனால் லெட்சுமிபுரம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினருடன் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. தொடர்ந்து கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து லெட்சுமிபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன் கூறியதாவது: தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் கூறப்படும் உறுதிகளை எழுதி வாங்க முடிவு செய்துள்ளோம். கிணறு எங்களுக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கிராம கமிட்டியினரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x