Published : 10 Aug 2017 09:43 AM
Last Updated : 10 Aug 2017 09:43 AM
அம்மாபேட்டை அருகே பாலியல் புகாரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி உள்ள புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரபு(38).
இவர் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி நேற்று தற்கொலைக்கு முயன்ற நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் நேற்று பள்ளியில் திரண்டு போராட்டம் நடத்தினர். அந்தியூர் - மேட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT