Published : 30 Aug 2017 08:03 AM
Last Updated : 30 Aug 2017 08:03 AM
இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் அதிமுகவை கோமா நிலைக்கு கொண்டுபோய்விட்டன என்று நடிகரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகரும், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளருமான செந்திலை தற்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
இதையடுத்து நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு வந்த செந்தில், அவரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில் கூறியதாவது:
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இக்கட்சி நன்றாகத்தான் இருந்தது.
கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு வைத்திருந்தார்.
ராமாயணத்தில் ஒரேயொரு சகுனிதான் உண்டு. இங்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் சில சகுனிகளும், முதல்வர் கே.பழனிசாமி அணியில் சில சகுனிகளும் உள்ளனர். அதிமுகவை அந்த அணிகள் கோமா நிலைக்கு கொண்டுவந்துவிட்டன.
இவ்வாறு செந்தில் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT