Published : 16 Nov 2014 10:26 AM
Last Updated : 16 Nov 2014 10:26 AM

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு 2 புதிய துணை ஆணையர்கள்

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சிக்கு 2 புதிய துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (பணிகள்) உள்ள டாக்டர் பிங்லே விஜய் மாருதி மாற்றப்பட்டு, தொழில்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சுபோத்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராகவும், ஒசூர் சார்-ஆட்சியர் பிரவீன் பி.நாயர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

நில நிர்வாக இணை ஆணையர் கே.எஸ்.கந்தசாமி, சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் (பணிகள்), திருப்பத்தூர் சார்-ஆட்சியர் சில்பா பிரபாகர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் (கல்வி), கோவில்பட்டி சார்-ஆட்சியர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x