Published : 20 Nov 2014 10:12 AM
Last Updated : 20 Nov 2014 10:12 AM
பொங்கல் முடிந்து சென்னை வருவதற்கான ரயில் டிக்கெட்டு களின் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, அடுத்த 7 நிமிடங்களில் முடிந்து விட்டது. இதனால், வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பண்டிகை நாட்களில் லட்சக் கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்புவர். இவ்வாறு பயணம் செய்பவர்களில் பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார் கள். இதற்கான ரயில் டிக்கெட் களின் முன்பதிவு 60 நாட் களுக்கு முன்பு தொடங்கும். அதன்படி வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு பொங்கல் விடு முறை என்பதால் பெரும்பாலான மக்கள் 13ம் தேதியே சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார் கள். இதனால் ஏற்கெனவே 13 மற்றும் 14-ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டன. இந்நிலையில், பொங் கல் விடுமுறை முடிந்து 18ம் தேதி சென்னை திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் உள்ள 180 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த முன்பதிவு தொடங்கிய அடுத்த 7 நிமிடங்களில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை புறப்பட்டு வரும் ரயில்களில் முன்பதிவு முடிந்தது. குறிப்பாக, பாண்டியன், வைகை, அனந்தபுரி, குருவாயூர், நெல்லை, பொதிகை, பெர்ல் (முத்துநகர்), கன்னியாகுமரி, மங்களூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்புக்கான முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும், இந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 300 வரை தொட்டது. இதனால், வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT