Published : 26 Aug 2017 06:50 PM
Last Updated : 26 Aug 2017 06:50 PM
ஆளுநர் வித்யாசாகர் ராவ் திமுக எம்.எல்.ஏக்களை ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளையில் சந்திக்க உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். நாளை சென்னை வர உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை வரவேற்கவே ஆளுநர் சென்னை வந்துள்ளார் என தகவல் வெளியாகி இருந்தாலும், சென்னையில் தங்கியுள்ள ஆளுநரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தித்து தமிழக சட்டப்பேரவை உடனடியாக கூட்டச்சொல்லி வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதையொட்டி, ஆளுநர் திமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30க்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சந்திக்கிறார். துரைமுருகன் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சந்திக்கின்றனர்.
முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரை சந்தித்து வலியுறுத்துவோம் என ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT