Published : 28 Aug 2017 12:01 PM
Last Updated : 28 Aug 2017 12:01 PM

ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகம் முன் சசிகலா, தினகரன் கொடும்பாவி எரிப்பு

அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் நடக்கும் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தினகரன், சசிகலா உருவ பொம்மையை அதிமுக தொண்டர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி , துணை முதல்வர் ஓபிஎஸ், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சசிகலா தினகரனை கட்சியை விட்டு நீக்குவது , பொதுக்குழுவை கூட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் நடக்கும் கட்சி அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்ட அரங்கிற்கு வரும் கட்சி எம்.எல்.ஏ, எம்பிக்கள், நிர்வாகிகள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கட்சித்தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயபேட்டை லாயிட்ஸ் சாலையில் குறைந்த அளவிலேயே தொண்டர்கள் கூடி இருந்தனர். அப்போது தினகரன், சசிகலா உருவப்படங்கள் பொதிந்த உருவபொம்மையுடன் வந்த அதிமுக தொண்டர்கள் திடீரென அதை தீவைத்து எரித்தனர்.

சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்து உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x