Published : 13 Jul 2017 09:41 AM
Last Updated : 13 Jul 2017 09:41 AM

‘கணினியில் பட்டனை தட்டினால் வீட்டுக்கே பட்டா வரும்’- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

‘பட்டாவுக்காக தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதில்லை; கணினியில் பட்டனை தட்டினால் வீட்டுக்கே பட்டா வரும்’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித் தார்.

சட்டப்பேரவையில் பத்திரப் பதிவுத்துறை மானிய கோரிக் கையில் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமர் பேசும்போது, ‘‘பத்திரப் பதிவின் போதே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கப் படுகிறது. ஆனால், தற்போது வருவாய்த்துறையினரிடம் தனி யாக விண்ணப்பிக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கு பதிலளித்து வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ‘‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆவணப்பதிவின் போதே, பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பப் படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் நடக்கிறது. இதுவரை 2 லட்சத்து 69 ஆயிரத்து 990 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பட்டா பெறுவதற்கு நேரில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வேண் டியதில்லை. வீட்டில் இருந்த படியே கணினியில் பட்டனை தட்டினால் பட்டா வீடு தேடி வரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x