Published : 12 Jul 2017 08:55 AM
Last Updated : 12 Jul 2017 08:55 AM
தமிழ்நாடு தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குநர் சந்திரசேகரன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடய அறிவியல் பிரிவில் முக்கிய பங்காற்றினார். பத்மபூஷண் விருது பெற்றுள்ள சந்திரசேகரன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
83 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில் நேற்று அவர் காலமானார். சின்ன மலையில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT