Published : 30 Jul 2017 11:19 AM
Last Updated : 30 Jul 2017 11:19 AM
தமிழகத்தில் பலவீனமான முதல் வர் மற்றும் பலவீனமான ஆட்சி நடப்பதால் மத்திய அரசு மிரட்டி வருகிறது என தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக சார்பில் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி ஒகேனக்கல்லில் பாமக இளைஞரணி தலைவரும், தரும புரி நாடாளுமன்ற உறுப்பினரு மான அன்புமணி ராமதாஸ் தலைமையில் பேரணி தொடங்கி யது.
இந்தப் பேரணி நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் வந்தது. அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
காவிரித்தாயை நம் தாயை போல் நினைத்து காக்க இளைஞர் கள் அனைவரும் முன் வரவேண் டும். பாலைவனமாக மாறிய பாலாற்றை போலவே இன்னும் 40 ஆண்டுகளில் காவிரியும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஒன்றி ணைந்து போராடியதைப்போல காவிரியில் மணல் அள்ளுவதை தடுக்கவும், காவிரியை காக்கவும் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். காவிரி மற்றும் அதன் துணை நதிகள் மூலமாக 12 மாவட்டங்கள் பாசன வசதியும், 18 மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெறுகின்றன.
கடந்த 1924-ம் ஆண்டு சென்னை மாகாணமும், மைசூர் மாகாணமும் செய்து கொண்ட 50 ஆண்டு கால ஒப்பந் தத்தை 1974-ம் ஆண்டு புதுப் பிக்காததே காவிரி பிரச் சினைக்கு முக்கிய காரணமாகும். மற்ற மாநிலங்களில் அணை கட்ட வேண்டும் என அம்மாநில அரசுகள் முயற்சித்து வரும் வேளையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது வேதனையளிக்கிறது.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயாராக இல்லை. கடலூர், நாகை மாவட்டத்தில் பெட்ரோல் கெமிக்கல் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாவட் டமுமே அழிந்துவிடும்.
டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் திட் டத்தை அரசு இயற்றுவது ஏன் தமிழகத்தில் பலவீனமான முதல்வர் மற்றும் ஆட்சி நடப்பதால் மத்திய அரசு மிரட்டி வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT