Published : 14 Jul 2017 10:28 AM
Last Updated : 14 Jul 2017 10:28 AM
சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் குளச்சல் தொகுதி எம்எல்ஏ. ஜே.ஜி.பிரின்ஸ், ‘‘வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.
வெளிநாட்டுக்கு பணிக்கு செல்பவர்கள் அங்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கேரளாவில் உள்ளது போல் வெளிநாட்டுக்கு பணிக்கு செல்பவர் களுக்கான தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண் டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிலோபர் கபீல், ‘‘வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பரிந்துரைப்படி குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். வெளிநாட்டுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து, அதன் மூலம் செல்லலாம். அப்போது பிரச்சினை ஏதும் ஏற்படாது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT