Published : 16 Jul 2017 10:36 AM
Last Updated : 16 Jul 2017 10:36 AM
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு அழைப்புக் கடித்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT