Published : 04 Jul 2017 09:35 AM
Last Updated : 04 Jul 2017 09:35 AM

கோடநாடு எஸ்டேட் பணியாளர் தற்கொலை

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ் டேட்டில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவுக்கு சொந்தமான கோட நாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொலை செய் யப்பட்டார். இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த எஸ்டேட் டில் கணினிப் பிரிவில் பணிபுரிந்து வந்த தினேஷ்குமார்(22), கொண வக்கரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கோத்தகிரி போலீஸார் கூறும்போது, “தினேஷ்குமாருக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற் காக கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது பார்வை பறிபோயுள்ளது. இத னால், மிகுந்த மன உளைச்ச லில் இருந்த அவர், நேற்று தூக் கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x