Published : 11 Jul 2017 08:01 PM
Last Updated : 11 Jul 2017 08:01 PM

அமர்நாத் பயணிகள் மீது தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத்துக்கு புனித யாத்திரை சென்ற பயணிகள் மீது திங்கட்கிழமை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பெண் பயணிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து: அமர்நாத் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் வெறுக்கத்தக்கதாகும். அப்பாவி யாத்ரீகர்களை தாக்கியிருக்கிறார்கள். அந்த இதயமற்றவர்களை தயவு தாட்சிணியம் இன்றி தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x