Published : 23 Jul 2017 09:27 AM
Last Updated : 23 Jul 2017 09:27 AM
சென்னை விமான நிலை யத்தில் நிருபர்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியதாவது:
உள்ளாட்சித் தேர் தலை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. மாநில தேர்தல் ஆணைய மும் தமிழக அரசும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
மருத்துவ கல்விக் கான நீட் தேர்வு போல பொறியியல் கல்விக் கான நுழைவுத் தேர்வி லும் கவனக்குறைவாக இருந்து தமிழக மாண வர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகக் கூடாது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்று தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள் ளது.
அரசியலுக்கு வருவ தற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கமல் ஹாசன் அரசை பற்றி விமர்சிப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து.
ஒருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் முன், அது சரிதானா என்று அரசு தீவிர கவனம் செலுத்துவது நியதி. இருப்பினும் வளர்மதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் முன், தமிழக அரசு இன்னும் சற்று சிந்தித்து இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT