Published : 16 Nov 2014 10:49 AM
Last Updated : 16 Nov 2014 10:49 AM

முன்னாள் ஊராட்சி தலைவர் மீது கொலை வெறித் தாக்குதல்: 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலை

திருமணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நேற்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டது திருமணம் ஊராட்சி. இதன் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் முருகன் (54). இவர் தற்போது செவ்வாப்பேட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில், முருகன் பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி என்ற இடத் தில் நேற்று மதியம் சென்றபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, கத்தியால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில், முருகனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்குப் போராடிக் கொண் டிருந்த முருகனை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் வீரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், தற்போதைய தலைவர் ஜெயராஜுக்கும், முருகனுக்கும் இடையே விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசியல் முன்விரோதம் அல்லது பழிவாங்கும் செயலாக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என பட்டாபிராம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x