Published : 14 Jul 2017 11:37 AM
Last Updated : 14 Jul 2017 11:37 AM
அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளை கவரும் விதமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உருவம் பதிக்கப்பட்ட லேபிள் வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என அஞ்சல்தலை சேகரிப்பா ளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று கடந்த 2015-ம் ஆண்டில் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோர் 15-ம் தேதி ரூ.5 மதிப்பிலான கலாம் உருவத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை மத்திய அரசு வெளி யிட்டது.
இந்நிலையில், கலாம் உருவம் பதிக்கப்பட்ட பள்ளி மாணவர்க ளுக்கான நோட்டு புத்தகங்களில் ஒட்டப்படும் லேபிள்களை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இது குறித்து ராமேசுவரம் அஞ்சல் நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் புதிதாக வாங்கிய நோட்டு, புத்தகங்களுக்கு அழகாக அட்டை போட்டு விதம் விதமாக லேபிள் ஒட்டுவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அஞ்சல் துறையின் சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவத்துடன் கூடிய லேபிளை தயாரித்து வெளியிட்டுள்ளோம். 16 லேபிள்களின் விலை ரூ.24.
இந்த கலாம் லேபிள் ராமேசு வரம், ராமநாதபுரம், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களில் தற் போது விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் லேபிள்கள் விற்பனை செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT