Published : 12 Jul 2017 07:49 PM
Last Updated : 12 Jul 2017 07:49 PM
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அடுத்த இரு தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, எண்ணூர், செம்பரம்பாக்கத்தில் தலா 9 செமீ, பூந்தமல்லியில் 7 செமீ, திருவள்ளூர், சென்னை விமான நிலையத்தில் தலா 6 செமீ, பொன்னேரி, காஞ்சிபுரம், அரக்கோணம், திண்டிவனம், சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செமீ, பூண்டி, திருத்தணி, திருவாலங்காடில் தலா 4 செமீ, செங்கல்பட்டு, ஆவடி, வந்தவாசி, மாமல்லபுரம், செங்குன்றம், ஆரணி, பரங்கிப்பேட்டை, உத்திரமேரூர், செஞ்சி, மாதவரத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT