Published : 29 Jul 2017 08:34 AM
Last Updated : 29 Jul 2017 08:34 AM

85 சதவீத உள்ஒதுக்கீடு: தீர்ப்பு தள்ளிவைப்பு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த ஜூலை 14-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x