Published : 08 Jul 2017 09:02 AM
Last Updated : 08 Jul 2017 09:02 AM
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த 2 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் தீவிர வாத தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அந்த மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசார ணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி உதவி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இக்பாலை, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் புழல் சிறையில் இக்பாலிடம் விசாரித்தனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த மேலும் 4 பேர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நன்கொடை அளித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அந்த 4 பேர் குறித்து விசா ரணை செய்து வந்தனர். ராஜஸ் தான் போலீஸார் நடத்திய விசார ணையில், சென்னை கொண்டித் தோப்பு சக்கரை செட்டித் தெருவைச் சேர்ந்த பர்மா பஜார் வியாபாரி ஹாரூண் ரஷீத் (36) என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நன்கொடை அளித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநில போலீஸார் கடந்த திங்கள் இரவு ஹாரூணைக் கைது செய்து ராஜஸ்தான் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், ஹாரூணின் உறவினர்களான மண்ணடியைச் சேர்ந்த ராஜா முகம்மது, சிக்கந்தர் ஆகியோருக்கு, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT