Published : 26 Jul 2017 09:33 AM
Last Updated : 26 Jul 2017 09:33 AM
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ரூ. 1,453 கோடியே 58 லட்சம் விடு விக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறு வனங்களால் விவசாயிகளுக்கு தற்போது இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற் காக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி வரை ரூ. 1,453 கோடியே 58 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்களால் மேலும் இழப்பீட்டுத் தொகை விடு விக்கப்படக் கூடும். பயிர் காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரொக்க மாக வழங்காமல், வங்கி சேமிப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப் படையாக செயல்படும் வகையில் இழப்பீட்டுத் தொகை பெற்ற பயனாளிகளின் பட்டியலை தொடக்க வேளாண்மைக் கூட்டு றவு கடன் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. துணைப் பதிவாளர் தலை மையில் பறக்கும் படை குழுக் களை அமைத்து இழப்பீட்டுத் தொகை வழங்குவதை கண் காணிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT