Published : 12 May 2017 12:40 PM
Last Updated : 12 May 2017 12:40 PM

மதிப்பெண் மறுகூட்டலுக்கும், விடைத்தாள் நகல் பெறவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முன்னதாக, விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற கட்டணம் பகுதி I மொழிப் பாடத்துக்கு 550 ரூபாயும், பகுதி II மொழிப் பாடத்துக்கு 550 ரூபாயும், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275 ரூபாயும் பணமாக செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x