Published : 01 Jul 2016 08:53 AM
Last Updated : 01 Jul 2016 08:53 AM

கும்பகோணம் தீ விபத்து: மேல்முறையீட்டு மனுக்கள் ஜூலை 20-க்கு ஒத்திவைப்பு

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஜூலை 16-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, மாவட்ட தொடக் கக் கல்வி அலுவலர் பாலாஜி உட்பட 9 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை ரத்து செய்யக் கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பிலும், 11 பேரை விடுதலை செய்ததை ரத்து செய்து அவர் களுக்கு தண்டனை வழங்கக் கோரி அரசுத் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன.

இந்நிலையில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜூலை 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x