Last Updated : 09 Jul, 2016 12:30 PM

 

Published : 09 Jul 2016 12:30 PM
Last Updated : 09 Jul 2016 12:30 PM

இணைப் பள்ளிகள் திட்டத்தில் பயில பள்ளி மாணவர்கள் ஆர்வம்: நகரத்துடன் கைகோர்த்த கிராமப்புற பள்ளி

முன்னேறிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப் பள்ளிகள் என்ற திட்டத்தை முதன்முறையாக நாகை மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகள் செயல்படுத்தி முன்னோட்டம் பார்த்து உள்ளன.

இத்திட்டத்தின்படி, நகர்ப்புறத் தில் உள்ள ஒரு பள்ளியும், கிராமப் புறத்தில் உள்ள ஒரு பள்ளியும் இணைப் பள்ளிகளாக தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். கிராமப்புற பள்ளியின் ஏதாவது ஒரு வகுப்பு மாணவர்கள், நகர்ப் புறத்தில் உள்ள பள்ளிக்கு முன் அறிவிப்புடன் சென்று அப்பள்ளி யின் அதே வகுப்பு மாணவர்களு டன் தங்களை அறிமுகப்படுத் திக்கொண்டு ஒன்றாக அமர்ந்து பாடம் கற்க வேண்டும். நகர்ப்புற பள்ளியின் ஆசிரியர்கள் அவர்க ளுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

மதிய உணவை சேர்ந்தே உண்ணும் மாணவர்கள், மதியம் பாடத்துக்கு அப்பாற்பட்ட திறன் களை வெளிப்படுத்துவார்கள். மாலையில், தங்கள் பள்ளிக்குத் திரும்பும்போது தங்கள் முகவ ரியை புதிய நண்பர்களுக்கு அளித்து கடிதம் எழுதச்சொல்லி பிரிவார்கள். பிறிதொரு நாளில், நகர்ப்புற பள்ளி மாணவர்கள் இதேபோல கிராமப்புற பள்ளிக்கு வந்து இதேமுறையில் கல்வி பயில்வார்கள்.

தமிழகத்திலேயே முதன் முறையாக நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் ஒரத்தூரில் உள்ள சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியும், காடம்பாடி நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியும் தங்களை இணைப் பள்ளிகளாக இணைத்துக்கொண்டு உள்ளன.

கடந்த ஜூன் 30-ம் தேதி ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவர் கள் 25 பேர், காடம்பாடி நக ராட்சி நடுநிலைப் பள்ளிக்குச் சென்றனர். 2 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தமிழ், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களை ஒன்றாகப் பயின்றனர்.

மதிய உணவுக்குப் பின்னர், காடம்பாடி பள்ளி மாணவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சியையும், ஒரத்தூர் பள்ளி மாணவர்கள் பாரதியார் பாடலையும், யோகா நிகழ்ச்சியையும் வழங்கினர். பின்னர் முகவரிகளை பகிர்ந்து கொண்டு பள்ளிக்குத் திரும்பி னர். இந்த கற்றல் முறை மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியான தாகவும் இருந்ததாக 2 பள்ளிகளின் மாணவர்களும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

சிறப்பான இத்திட்டத்தின் வகுப்புகள் செயல்படும் விதத்தை நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விமலா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரனார் பள்ளியின் தலைமை யாசிரியர் சிவா, ஆசிரியர்கள் பாலசண்முகம், சத்யா, காடம்பாடி பள்ளித் தலைமையாசிரியர் இள மாறன், ஆசிரியர்கள் ஜூலியட், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x