Published : 21 Jun 2016 06:14 PM
Last Updated : 21 Jun 2016 06:14 PM
தற்போது மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகளில் என் தொகுதியில் உள்ள கடைகளை மூடியதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான 2-ம் நாள் விவாதம் இன்று நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி ''தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசின் முடிவை வரவேற்கும் அதேவேளையில் கடந்த காலங்களில் எனது தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என முதல்வரிடம் நான் கோரிக்கை வைத்திருந்தேன்.
என்னுடைய கோரிக்கையை ஏற்று தற்போது மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகளில் என் தொகுதியில் உள்ள கடைகளை மூடியதற்கு தமிழக அரசுக்கும்,முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT