Published : 05 Jan 2017 08:36 AM
Last Updated : 05 Jan 2017 08:36 AM
புதுச்சேரி அதிமுக நிர்வாகியும், முன்னாள் சபாநாயகருமான வி.எம்.சி. சிவக்குமார் படுகொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, புதுச்சேரி நிரவி-திருப்பட்டினம் தொகுதியி்ல் அதிமுக சார்பில் வி.எம்.சி.சிவக்குமார் வேட்பாளராக போட்டியிட் டார். தற்போது அவர், முன்விரோதம் காரணமாக படு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து வருத்த மடைந்தேன். இந்த படுகொலைக்கு கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணமான வர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சிவக்குமாரை இழந்து வாடும் அவ ரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT