Published : 05 Jun 2016 10:00 AM
Last Updated : 05 Jun 2016 10:00 AM

கோயம்பேடு - ஷெனாய்நகர் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: விரைவில் தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரை சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கு வதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டி, ஏசி வசதியுடன் கூடிய ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முழு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் தொடங்க மெட்ரோ ரயில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது, தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேட்டில் இருந்து ஷெனாய்நகர் வரையில் ரயில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவுள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த பணி தொடங்கிவிடும்.

பிறகு, 6 மாதங்களுக்கு சுரங்கப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு நடத்துவார்கள். அதன்பிறகு மக்களின் சேவைக்கு திறந்து வைக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x