Published : 26 Jul 2016 08:11 AM
Last Updated : 26 Jul 2016 08:11 AM

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப் பாதையில் குவிந்து கிடந்த குப்பையால் போக்குவரத்து பாதிப்பு

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் குவிந்து கிடந்த குப்பையால் அந்த சாலையில் நேற்று போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

வியாசர்பாடி ஜீவா ரயில் நி லையம் அருகில் உள்ள கணே சபுரம் ரயில்வே சுரங்கப் பாதை மிகவும் குறுகியதாக இருப்பதால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக் கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள அந்த சுரங்கப் பாதையில் நேற்று காலை 11 மணியளவில் குவிந்து கிடந்த குப்பையால், அங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வ ரத்து ஸ்தம்பித்தது. அதனைத் தொடர்ந்து, ரயில் பாதையின் இரு புறங்களிலும் உள்ள சாலைகளில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்றன. மேலும் அப்பகுதியில் துர்நாற்ற மும் வீசியது. போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், துர் நாற்றத்தை சகிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா பங்கேற் கும், மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடக்க நிகழ்ச்சி, மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றதால், அம்மண்டலத் திலுள்ள அனைத்து மாநகராட் சிப் பணியாளர்களும் அங்கு சென்றிருந்தனர். இந்நிலையில், தண்டையார்பேட்டை மண்ட லத்துக்கு உட்பட்ட கணேசபுரம் சுரங்கப் பாதையில் குப்பை குவிந்து கிடந்ததால், அதை அகற்ற மாநக ராட்சி ஊழியர்கள் உடனடியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மாநகராட்சி அதிகாரி ஒருவ ரிடம் கேட்டபோது, “தனியார் லாரி ஒன்று, அதிக உயரத்தில், அதிக குப்பையை ஏற்றிக்கொண் டு, கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக வந்துள்ளது. அப்போது, மேலே உள்ள ரயில் பாதையில் லாரியில் ஏற்றி வரும் பொருட்கள் மோதாமல் இருப்பதற்காக, ரயில் பாதைக்கு முன்னதாகவே தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பில் மோதி, லாரியில் அதிக உயரத்தில் இருந்த குப்பை, சாலையில் விழுந்தது. பின்னர் லாரி ஓட்டுநர் குப்பையை அகற்றாமல் சென்றுவிட்டார். தகவலறிந்தவுடன் மாநகராட்சிப் பணியாளர்கள் வந்து, குப்பையை அகற்றிவிட்டனர். தற்போது அங்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது” என்றார்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய செங்குன்றம் வினோத் கூறும்போது, “போக்குவரத்துத் துறை அதி காரிகள் கண்காணித் து, லாரிகளில் அதிக உயரத்தில் குப்பை ஏற்றி வரப்படுவதையும், அதிக பாரம் ஏற்றி வருவதையும் தடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x