Published : 18 Mar 2017 09:34 AM
Last Updated : 18 Mar 2017 09:34 AM

அதிமுக மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் நேற்று இரு புகார் மனுக்களை அளித்தனர்.

வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை அமைப்பாளர் எஸ்.ஜெபதாஸ் பாண்டி யன், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த புகார் மனுவில் கூறியி ருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில், மாநகராட்சியின் 42-வது வார்டு, பழைய வண்ணாரப்பேட்டை, வீரக்குட்டித் தெருவில், சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுகவினர், பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி, அவர்களின் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகளை வாங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை திமுகவினர் பிடித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சசிகலா அணியை சேர்ந்த அதிமுகவினர் தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி வருகின்றனர். அதனால் இந்த இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற, அதிக அளவில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து, தேர்தல் விதிகளை மீறும் சசிகலா அணி அதிமுகவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மனுவில், “புதுவண்ணாரப் பேட்டை கிராஸ் ரோடு பூங்கா அருகில், தேர்தல் விதிகளை மீறி, சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுகவினர், போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் கூடாரம் அமைத்து வருகின்றனர். இது தொடர்பாக தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x