Published : 11 Aug 2016 08:57 AM
Last Updated : 11 Aug 2016 08:57 AM

சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்: 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள் நேற்று முன்தினம் மதியம் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். மீதம் இருந்த பிரியாணியை இரவில் சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 20 மாணவர்களும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 மாணவர் கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்து வமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேட்டபோது, “3 மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் நலமாக உள் ளனர். இன்னும் ஓரிரு நாளில் மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப் படுவார்கள்” என்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x